Tuesday, February 5, 2019

நாச்சியார் திருமொழி 2.10 - nAchiyAr tirumozhi 2.10

பாடல் 10

சீதை வாயமுதம் உண்டாய்
..எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர்
..மழலைச் சொல்லை
வேதவாய்த் தொழிலாளர்கள் வாழ்
..வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் தன்
கோதை வாய்த்தமிழ் வல்லவர்
..குறைவின்றி வைகுந்தம் சேர்வரே

சீதையின் அன்பிற்கு உரியவனான எம்பெருமானை, "எங்கள் சிற்றில் வந்து சிதையேல்" என்று ஆயர்பாடி வீதியில் விளையாடும் ஆயர்சிறுமியர் வாய் வழி வந்த மழலைச் சொற்களை, வேதம் ஓதும் அந்தணர்கள் வாழும் வில்லிபுத்தூரின் தலைவனான விஷ்ணு சித்தரின் மகளான கோதை, தமிழில் சொன்ன இப்பாடல்களைப் பாட வல்லவர்கள், எவ்வித குறையும் இன்றி இருப்பார்கள். முடிவில் வைகுந்தத்தை அடைவார்கள்.

Song 10

seethai vaai amudham uNdaai
..engal sitRil nee sidhaiyEl endru
veethi vaai viLaiyaadum aayar siRumiyar
..mazhalaich chollai
vEda vaai thozhilaaLargaL vaazh
..villiputthoor man vittu chitthan than
kOthai vaai thamizh vallavar
..kuRaivindri vaikundham sErvarE

This is the episode of small girls of aayarpadi, requesting the lord who is dear to Sita, not to destroy their small house made up of sand, narrated by kothai, in Tamil, the daughter of Vishnuchittan, who is as mightier as the King of Srivilliputthoor, where the learned persons chanting Veda live. Those who say these songs will be free from sins and attain the abode of Narayana (vaikuntam).

Monday, February 4, 2019

நாச்சியார் திருமொழி 2.9 - nAchiyAr tirumozhi 2.9

பாடல் 9

முற்றத்து ஊடு புகுந்து நின்
..முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும்
..சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற
..நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால்
..இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்

கோவிந்தா!, நாங்கள் சிற்றில் கட்டி விளையாடிக்கொண்டிருக்கும் எங்கள் வீட்டின் முற்றத்தினுள் நீ புகுந்து, உன் முகத்தைக் காட்டி, புன்முறுவல் செய்தாய். அவ்வாறு நீ செய்ததில் எங்கள் சிந்தை சிதைந்தது (எங்கள் வசம் அது இல்லை). நீ வந்து உதைத்ததில் எங்கள் சிற்றில் சிதைந்தது. அன்று, மாவலியிடம் மூன்று அடி மண் பெற்று, ஓரடியால் இந்த பூவுலகம் முழுவதையும் அளந்து, மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தவனே! எங்களுக்கு, நீ ஒரு இக்கட்டினை உண்டாக்கினால், பெரியோர்கள் என்ன சொல்வார்கள்?

Song 9

mutRatthu oodu pugundhu nin
..mugam kaatti punmuRuval seithu
sitRilOdu engal sindhaiyum
..sidhaikkak kadavaiyO gOvindA
mutRa maNNidam thaavi viNNuRa
..neeNdu aLandhu koNdAi emmai
patRi meippiNakku ittakkaal
..indhap pakkam nindRavar en sollAr

Oh Govinda, you came to our home where we are building a sand house and are playing. You showed your face and smile to us. we lost ourselves in that. You physically damaged our small sand house and mentally damaged our minds. Oh the one who measured the Earth and the world above with the feet, if you create some embrassment to us, what will others say?

Sunday, February 3, 2019

நாச்சியார் திருமொழி 2.8 - nAchiyAr tirumozhi 2.8

பாடல் 8

வட்டவாய்ச் சிறுதூதையோடு
..சிறுசுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோங்களைச்
..சிற்றில் ஈடு அழித்து என்பயன்?
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய்
..சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தால் இன்னாமை
..அறிதியே கடல் கண்ணனே

தூதை - பானை.

வட்டமான வாயுடைய சிறிய பானையைக் கையில் ஏந்தி, அதில் மணல், சிறு குச்சிகள் ஆகியவற்றை வைத்து, வீடு கட்டி விளையாடிக்கொண்டிருக்கும் எங்களது சிற்றில்லை களைப்பதினால் என்ன பயன்? அதனைத் தொட்டு, உதைத்து, எங்கள் மனத்தை இடித்துவிட வேண்டாம் கண்ணா! கையில் சுடர் விடும் சக்கரம் ஏந்தியவனே! கசந்த நெஞ்சத்தோடு நாங்கள் இருந்தால், எங்களுக்கு, கரும்புக்கட்டியும் ருசிக்காது என்பதை நீ அறிவாய் அல்லவா?

Song 8

vatta vaai siru thoothai yOdu
..siru suLagum maNalum koNdu
ittamaai viLaiyAduvOngaLai
..sitRil eedu azhitthu en payan?
thottu uthaitthu naliyEl kaNdAi
..sudar chakkaram kaiyil yEndhinAi
kattiyum kaitthal innaamai
..aRithiyE kadal kaNNanE

Oh Kanna! (kannane) the one who holds glittering disc (sudar chakkaram) on a hand (kaiyil yEndhinaai), we are playing a game that gives happieness to us (ittamaai viLaiyAduvongalai) by building sand house. We take sand (manal), twigs (suLagu) on a small pot (siru thoothai) that has a circular opening in the mouth (vatta vaai).

If you come and touch it with your feet and kick, we will become sad. Dont make us sad by destroying it (thottu uthaitthu naliyEl). There is no use in destroying it (sitril eedu azhitthu en payan?). You know that (arithiyE), even sugar cane or jaggery (kattiyum) wont taste good (kaitthaal innaamai), if our mind is unhappy.

Thursday, January 31, 2019

நாச்சியார் திருமொழி 2.7 - nAchiyAr tirumozhi 2.7

பாடல் 7

பேதம் நன்கு அறிவார்களோடு இவை
..பேசினால் பெரிதிஞ் சுவை
யாதும் ஒன்று அறியாத பிள்ளைகள்
..ஓமை நீ நலிந்து என் பயன்?
ஓத மாகடல் வண்ணா
..உன் மணவாட்டிமாரொடு சூழறும்
சேது பந்தம் திருத்தினாய் எங்கள்
..சிற்றில் வந்து சிதையேலே

பேதம் அறிந்தவர்களோடு, கண்ணா, நீ இந்த விளையாட்டைச் செய்தால், நன்கு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் எதுவுமே தெரியாத பிள்ளைகளான எங்களிடம் இவ்வாறு விளையாடி, எங்களைத் துன்புறுத்தினால், அதனால் ஆகும் பயன் என்ன? ஒன்றும் இல்லை.

மிகுந்த சத்தத்தோடு திகழ்கின்ற பெரிய கடலின் வண்ணம் கொண்ட பெருமானே, உன் மனைவிமார்கள் மீது ஆணையிடுகிறேன். எங்கள் சிற்றிலை வந்து சிதைக்காதே.

Song 7

bEdham nangu aRivaargaLOdu ivai
..pEsinaal perithum suvai
yaadhum ondRu aRiyAdha piLLaigaL
..Omai nee nalindhu en payan?
Odha mA kadal vaNNA
..un maNavAttimArodu soozharum
sEthu bandham thirutthinaai engaL
..sitRil vandhu sidhaiyElE

Oh Lord! If you do all your mischiefs with those who know about you, it will be of some thing interesting. But if you do your mischiefs to us, who knews nothing, what is the use in it? Absolutely nothing.

Oh the one who has the complexion as the mighty ocean that makes huge sound, we are placing an oath on your consorts. Please do not come and destroy our small sand houses.

Wednesday, January 30, 2019

நாச்சியார் திருமொழி 2.6 - nAchiyAr tirumozhi 2.6

பாடல் 6

முற்று இலாத பிள்ளைகளோம்
..முலை போந்திலாதோமை நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ
..சிறிது உண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம், கடலை அடைத்து
..அரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய
..சேவகா! எம்மை வாதியேல்.

முற்று - முதுமை.

முதுமை அடையாத சிறு பிள்ளைகள் நாங்கள். எங்கள் முலைகளும் முழுதாக வளர்ச்சி அடையவில்லை. நாங்கள் நாள்தோறும் சிற்றில் கட்டி வருகிறோம். நீயும் தினமும் வந்து அதனைச் சிதைத்து, சேட்டை செய்கிறாய். எங்களுக்கு எதுவும் தெரியாது. அறியாத பிள்ளைகள் நாங்கள். நீயோ எல்லாம் அறிந்தவன். முன்பொரு காலத்தில், பிரட்டிக்காக, கடலில் அணை கட்டி, அரக்கர் குலத்தை முற்றிலுமாக அழித்து, இலங்கையையும் தீக்கிரையாக்கிய பெரியோன் நீ. எங்களை இனிமேலும் துன்பப்படுத்த வேண்டாம்.

Song 6

mutRu ilaatha piLLaigaLOm
..mulai pondhilaadhOmai naaLthoRum
sitRil mEl ittuk koNdu nee
..siRithu uNdu thiNNena naam adhu
katRilOm; kadalai adaitthu
..arakkar kulangaLai mutRavum
setRu ilangaiyaip poosal aakkiya
..sEvagaa emmai vaathiyEl

Oh the Lord, who knows everything and the one who built a dam across the ocean and fought against the enemies and burnt Lanka to ashes, please do not make us feel sad. We are small girls. Our breasts are still tender and we are yet to mature. We are just building houses daily and you keep on doing some mischeivous acts. We knew nothing other than you dear Lord.

Tuesday, January 29, 2019

நாச்சியார் திருமொழி 2.5 - nAchiyAr tirumozhi 2.5

பாடல் 5

வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில்
..விசித்திரப் பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்
..அழித்தி யாகிலும் உன்றன்மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால்
..உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன்
..முகத்தன கண்கள் அல்லவே

வெள்ளை நிறத்து நுண்ணிய மணல் கொண்டு, வீதியில், விசித்திரமாக நாங்கள் சிற்றிலைக் கட்டினோம். அந்த இல்லத்தை நீ அழித்தாலும், உன் மேல் கோபம் கொள்ள மாட்டோம். எங்களுக்குள் உருகி, அழுது, ஓடுவோமே தவிர, உன் மேல் ரோஷம் கொண்டு கோபித்துக்கொள்ள மாட்டோம். கள்ளனான மாதவனே, கேசவனே, நன்றாக இதைப் புரிந்து கொள். உன் முகத்தில் உள்ள கண்கள், கண்கள் அல்ல. இரும்பாகிய எங்களைக் கவர்ந்து இழுக்கும் காந்தம்.

Song 5

veLLai nuN maNal koNdu sitRil
..vichitthirap pada veedhi vaai
theLLi naangaL izhaittha koLam
..azhitthi yaagilum undRanmEl
uLLam Odi urugal allaal
..urOdam ondrum ilom kandaai
kaLLa mAdhavA kEsavA un
..mugatthana kaNgal allave

We built (theLLi naangaL izhaittha koLam) this small house (sitRil) using (koNdu) fine grained white sand (veLLai nuN maNal) in this street (veedhi vaai). If you destroy this (azhitthi yaagilum undRanmEl), still we will cry with in ourselves (uLLam Odi urugal allaal) and wont scold you out of anger (undRanmEl urOdam ondrum ilom kandaai). Please understand our feelings, Oh Madhava, Kesava (mAdhavA kEsavA), the one who stole our hearts (kaLLa). The eyes in your face is actually a magnet that attracts us. They are not eyes really.

Monday, January 28, 2019

நாச்சியார் திருமொழி 2.4 - nAchiyAr tirumozhi 2.4

பாடல் 4

பெய்யும் மாமுகில் போல் வண்ணா உன்றன்
..பேச்சும் செய்கையும் எங்களை
மையலேற்றி மயக்க உன்முகம்
..மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு என்னை
..நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள்
..சிற்றில் வந்து சிதையேலே

மழை நீரைத் தன்னிடம் வைத்துள்ள கார்மேகம் போன்ற நிறம் உடைய பெருமானே, உனது பேச்சும், செயலும் எங்களை மதி இழக்கச் செய்கின்றன. உனது முகமானது, மந்திரம் செய்து எங்களை மயங்கச் செய்கிறது. "அற்பமானவர்கள் நீங்கள்" என்று நீ சொல்லிவிடுவாயோ என்று எண்ணி, அதற்குப் பயந்து, நாங்கள் உன்னை ஒன்றும் சொல்லாமல் இருந்து வருகிறோம். சிவந்த தாமரையைப் போன்ற கண்களை உடையவனே, எங்கள் சிற்றிலை வந்து சிதைக்காதே.

Song 4

peyyu maamugil pol vaNNaa undran
..pEcchum seigaiyum engalai
maiyal yEtri mayakka un mugam
..maaya mandhiram thaan kolO
noyyar piLLaigaL enbatharkku unnai
..nOva naangal uraikkilOm
seyya thaamaraik kaNNinaai engal
..sitril vandhu sidhaiyElE

Oh! the one who is as dark as the clouds bearing water in it (peyyu maa mugil pol vannaa), your (undran) words (pEcchum) and action (seigaiyum) are mesmerizing us (engalai maiyal yEtri). Your face (un mugam) is casting spell on us (maaya mandhiram) and we are bound to it (mayakka). We fear that you might say, "You girls do not have mature minds" (noyyar piLLaigaL) and because of that fear, we are restraining ourselves from saying something that might hurt you (unnai nOva naangal uraikkilOm), Oh the lord who has eyes as red as  lotus (seyya thaamarai kanninaa). Please do not come and destroy our sand house.

Saturday, January 26, 2019

நாச்சியார் திருமொழி 2.3 - nAchiyAr tirumozhi 2.3

பாடல் 3

குண்டு நீர் உறை கோளரீ மதயானை
..கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மால் உறுவோங்களைக்
..கடைக் கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண்மணல் தெள்ளி யாம்
..வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண்டிரைக்கடல் பள்ளியாய் எங்கள்
..சிற்றில் வந்து சிதையேலே

ஆழம் மிக உடையதும் நீரை உடையதுமான தடாகத்தில் வாழும் சிங்கம் போன்ற கம்பீரமான யானையின் (கஜேந்திரன்) துயரத்தை (கோள்) அழித்தவனே! உன்னைப் பார்த்து மிகவும் ஆசைப்படும் (மால் - ஆசை; உறுதல் - கொள்ளுதல்) எங்களை, உன் கடைக்கண்களால் பார்த்து, இன்னும் வாட்டப்படுத்த வேண்டாம். வண்டல் நிறைந்த நுண்ணிய மணல் கொண்டு, இன்று, எங்கள் வளைகள் அணிந்த கைகளால் மிகவும் சிரமப்பட்டு வீடு கட்டியுள்ளோம். தெளிந்த அலைகள் நிறைந்த கடலில் (தெண்டிரை - தெள் + திரை) பள்ளிகொள்பவனே, எங்கள் சிற்றிலை வந்து சிதைக்க வேண்டாம்.

Song 3

kuNdu neer uRai kOLaree madha yaanai
..koL vidutthaai unnaik
kaNdu maal uRuvOngaLaik
..kadaik kaNgaLaal ittu vaadhiyEl
vaNdal nuN maNal theLLi yaam
..vaLaik kaigaLaal siramap pattOm
theNdiraik kadal paLLiyaai engaL
..sitRil vandhu sidhaiyElE

Oh the one, who removed the sorrows of the majestic elephant (Gajendra) [koL aree madha yaanai], who lived in a pond that has lot of water in it (kundu neer urai), please do not make us to feel a lot, by glancing with your beautiful eyes (kadaik kangalaal ittu vaadhiyel). We had a difficult time by building the sand house with our hands wearing bangles (vaLaik kaigaLaal siramap pattOm). Oh Lord, who resides in the ocean with clear waves (theNdiraikkadal - theL thirai kadal), please do not destroy our sand house.

Thursday, January 24, 2019

நாச்சியார் திருமொழி 2.2 - nAchiyAr tirumozhi 2.2

பாடல் 2

இன்று முற்றும் முதுகு நோவ
..இருந்து இழைத்த இச்சிற்றிலை
நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும்
..ஆர்வம் தன்னைத் தணிகிடாய்
அன்று பாலகனாகி ஆலிலைமேல்
..துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன்றனக்கு எங்கள்மேல்
..இரக்கம் எழாதது எம் பாவமே

இந்தப் பாடலில், இறைவனுக்கு, நம் மேல் இரக்கம் வரவில்லை என்றால், அது நாம் செய்த பாவமே என்று மிக அடக்கத்தோடு கூறுகிறாள் ஆண்டாள்.

இன்று முழுவதும், குனிந்து, நிமிர்ந்து, முதுகு நோக, மணல் வீடு கட்டினோம் நாங்கள். நீ இங்கே வந்து, கண் குளிரப் பார்த்து எங்களது மனத்தினை மகிழ்வடைய செய்ய வேண்டும் பெருமானே. முன்பொருநாள், ஊழிக்காலத்தில், ஆலிலையில் துயின்ற ஆதியே! என்றும் எங்கள் மேல் இரக்கம் உனக்கு வராதது (அதாவது எங்கள் சிற்றிலைக் காண வராதது), நாங்கள் செய்த பாவமே. வேறென்ன சொல்வது? என்று பாடுகிறாள்.

Song 2

indru mutrum mudhugu nOva
..irundhu izhaittha ichchitrilai
nandrum kannura nOkki naam koLum
..aarvam thannaith thaNigidaai
andru baalaganaagi aalilai mel
..thuyindra em aadhiyaai
endrum undranukku engal mel
..irakkam ezhaathathu em paavame

We, the girls have spent the whole day (indru mutrum) in building this sand house (irundhu izhaittha ichchitrilai), with lot of difficulties (mudhugu nOva). Oh Lord, the one who slept on the banyan leaf (baalaganaagi aalilai mel thuyindra em aadhiyaai), during the time of deluge (andru), please come and see our house. If you come and see it then we are said to be blessed. If you don't come to see it, then it is all only because of our fault or the sins committed by us (endrum undranukku engal mel irakkam ezhaathathu em paavame).

Tuesday, January 22, 2019

நாச்சியார் திருமொழி 2.1 - nAchiyAr tirumozhi 2.1

திருமொழி 2

பாடல் 1

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற
..நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகனாகப் பெற்றால்
..எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று
..பங்குனிநாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா
..எங்கள் சிற்றில்வந்து சிதையேலே

இந்தப் பாடலில், ஆண்டாள், இறைவனை, "நீ வர வேண்டாம். வந்து எங்கள் சிற்றில்லைச் சிதைக்க வேண்டாம்" என்று சொல்லி, அதன் மூலம் இறைவன் வரவேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறாள். நமக்கு ஒருவரிடம் ப்ரியம் இருந்தால், அவரிடம், "நீங்கள் எல்லாம் என் வீட்டிற்கு வர மாட்டீர்கள்" என்று சொல்லுவோம் அல்லவா? அது போலவே இப்பாடலும்.

ஆயிரம் பெயர்கள் கொண்டவனான நாராயணனே, மனிதனாக இப்பூவலகில் அவதரித்தவனே (ராம, கிருஷ்ண அவதாரங்கள்), உன்னை எங்களது மாமியின் மகனாகப் பெற்றால் (கணவன்) எங்களது துன்பங்கள் தீர்ந்துவிடப் போகிறதா என்ன? மன்மதன் வரும் நேரம் என்பதால், நாங்கள் இந்தப் பங்குனி நாளில், சிற்றில் கட்டி, அலங்கரித்து வைத்துள்ளோம். ஸ்ரீதரனே (சிரீதரா), எங்களிடம் வந்து விளையாடி, நாங்கள் ஆசையாக கட்டிய மணல் வீடுகளைச் சிதைக்க வேண்டாம்.

சிறுமியர்கள், மணலில் கட்டும் வீடு - சிற்றில் எனப்படும். சிறு + இல் = சிற்றில்.

Tirumozhi 2

Song 1

naamam aayiram yEttha nindra
..nArAyanA naranE unnai
maami than maganaaga petrAl
..emakku vaadhai thavirume
kaaman potharu kaalam endru
..panguni naal kadai paaritthom
theemai seiyum sireedharaa
..engaL sitRil vandhu sithaiyElE

In this song, Anadal asks the Lord not to come and destroy their play houses built of sand. This type of songs are called as nindhA sthuthi. That is by the way of scolding one, we are actually praising them. If we like a person, we want them to come to our home. But we will normally say, "you wont be coming to our home and all". That expression shows that we are longing for their arrival.

Oh Narayana, the one who has thousand names (naamam aayiram), the one who descended to this world as a man [naranE] (rama, krishna), if we get you as our beloved (aunt's son) [maami than maganaaga petrAl], will our sorrows evade? (emakku vaadhai thavirume)

We are awaiting for Manmadhan (kaaman potharu kaalam endru) on this month of panguni (panguni naal kadai paaritthom). So for him, we have built this houses and decorated it. You need not have to come and destroy these houses.

Monday, October 8, 2018

நாச்சியார் திருமொழி 1.10 - nAchiyAr tirumozhi 1.10

பாடல் 10

கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக்
..கழலிணை பணிந்து, அங்கோர் கரியலற
மருப்பினை ஒசித்துப் புள்வாய் பிளந்த
..மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும்
..புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை
விருப்புடை இன்தமிழ் மாலை வல்லார்
..விண்ணவர் கோன் அடி நண்ணுவரே

கரும்பு வில், மலர் அம்புகள் கொண்ட மன்மதனின் கால்களைத் தொழுது, குவலயாபீடம் என்னும் யானை ஓலமிட, அதன் தந்தத்தை ஒடித்தவனும், பக்காசுரன் என்னும் கொக்கின் வடிவில் வந்த அசுரனின் வாயைப் பிளந்து, அனைவரையும் காத்தவனுமான மணிவண்ணனுக்கு என்னை சேர்பித்துவிடு என்று, ஆசையுடன் இனிய தமிழ் மாலையை, பெரிய மாடங்கள் பொலிவுடன் தோன்றும் புதுவை என்னும் வில்லிபுத்தூர் நகரின் மன்னன் விஷ்ணுசித்தன் (விட்டுசித்தன்) அவரது மகள் கோதையாகிய நான் சொன்னேன். இந்த மாலையை சொல்பவர்கள், தேவர்களுக்கெல்லாம் தலைவனான எம்பெருமான் நாராயணனின் திருவடிகளுக்கு அருகில் செல்வார்கள்.

Song 10

karuppuvil malarkkaNai kaamavELaik
..kazhaliNai paNindhu, angOr kari alaRa
maruppinai ositthu puL vaai piLandha
..maNivaNNaRku ennai vagutthidu endRu
poruppanna maadam polindhu thOndrum
..pudhuvaiyar kOn vittuchitthan kOdhai
viruppudai in thamizh maalai vallaar
..viNNavar kOn adi naNNuvarE

These songs in Tamil are sung by Kothai, who is the daughter of Vishnu chitthan (Periyazhwar), the king of Srivilliputtoor (pudhuvai), that has lot of huge and beautiful buildings. These songs are on Manmadhan, who holds a bow made of sugarcane and arrows made of flowers. The aim behind these songs are to request Manmadhan to help us to reach the abode of Narayana who killed the elephant (kuvalayaapeedam) by breaking it's tusk and who killed the asura in the form of a crane (bakkaasuran) by opening it's mouth widely. Those who chant these songs will get closer to the lotus feet of Narayana, the lord of Deva's (celestials).

Sunday, October 7, 2018

நாச்சியார் திருமொழி 1.9 - nAchiyAr tirumozhi 1.9

பாடல் 9

தொழுது முப்போதும் உன் அடிவணங்கித்
..தூமலர் தூய்த்தொழுது ஏத்துகின்றேன்
பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
..பணிசெய்து வாழப் பெறாவிடில் நான்
அழுதழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும்
..அதுவுனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவதோர் எருத்தினை நுகங்கொடுபாய்ந்து
..ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே

மன்மதனே, உன்னையே மூன்று வேளையும் தொழுது, உன்புகழ் பாடி, மலர்தூவி பணிகின்றேன். எதற்காக என்றால், நான் எப்போதும், பாற்கடல் வண்ணனான கண்ணனுக்கே எவ்வித குறையும் இன்றி கைங்கர்யம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால், அழுது அழுது தடுமாறி 'அம்மா' என்று கதறி விழுந்துவிடுவேன் என்பது உனக்கும் தெரியும். அப்படி என்னை விழச்செய்வது, வயலில் உழுது கொண்டிருக்கும், எருதினுக்கு, உணவு அளிக்காமல் கொடுமை படுத்துவது போல் ஆகும்.

Song 9

thozhuthu muppothum un adi vaNangith
..thoomalar thooitthozhuthu yEtthukindREn
pazhuthu indRip paaRkadal vaNNanukkE
..paNiseithu vaazhap peRaavidil naan
azhuthu azhuthu alamandhu ammA vazhanga aatRavum
..athu unakku uRaikkum kaNdaai
uzhuvathOr erutthinai nugam kodu paaindhu
..oottamindRi thurandhaal okkumE

Oh manmadha, I am praying to your feet three times a day and I am offering flowers to you and singing your fame. I should get an opportunity to serve the lord who resides in the milky ocean, without any problem. If I am unable to serve Him, you know very well about my fate. I will keep crying for ever and will sink. If you make me to fall, it is like torturing a bull without giving any food, that keeps on working on the field for its master always.

Saturday, October 6, 2018

நாச்சியார் திருமொழி 1.8 - nAchiyAr tirumozhi 1.8

பாடல் 8

மாசுடை உடம்பொடு தலை உலறி
..வாய்ப்புரம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா
..நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்
..பெண்மையைத் தலையுடைத்து ஆக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்
..என்னும் இப்பேறு எனக்கு அருளுகண்டாய்

இந்தப் பாடலில், ஆண்டாள், தான் எவ்வாறு நோன்பினை மேற்கொள்கிறாள் என்றும், அதன் குறிக்கோள் என்ன என்றும் தெரிவிக்கிறாள்.

எவ்வாறு?

பல நாட்களாக இருக்கும் இடத்தை விட்டு நகரவில்லை. அதனால் உடல் மாசு அடைந்திருக்கிறது. தலைக்கு எண்ணெய் தடவ வில்லை. ஆதலால், அவை காய்ந்து காணப்படுகிறது. ஒரு வேளை மட்டுமே உணவு உண்கிறோம். தாம்பூலம் உட்கொள்ளவில்லை.

தேசு, திறல் - அழகும், பராக்ரமமும் உடைய மன்மதனே, நான் உன்னை நோக்கி இவ்வாறு நோற்கின்ற இந்த கடினமான நோன்பின் குறிக்கோள் ஒன்று உள்ளது. அதைத் தெரிந்துக்கொள். எனது பெண்மையைச் சிறந்ததாக ஆக்கும் வண்ணம், "எம்பெருமானான கேசவனின் கால்களைப் பிடிப்பவள் இவள்" என்ற பெரும் பேறு எனக்கு நீ அருள வேண்டும்.

Song 8

maasudai udambodu thalai ulaRi
..vaaippuram veLutthu, oru pOthum uNdu
thEsudai thiRaludai kAmadEvaa
..nORkindRa nOnbinaik kurikkoL kaNdaai
pEsuvathu ondru undu ingu emperumaan
..peNmaiyai thalaiyudaitthu aakkum vaNNam
kEsava nambiyai kaalpidippAl
..ennum ippERu enakku aruLukaNdaai

In this song, Andal says how does she follow the worship and what is the aim in following this worship.

She was sitting in the same place for days together and praying. So, her body becomes covered with dust. She didnt apply oil and comb her hair. It has turned brown. She eats only once a day and didnt have betel leaves. So her lips have turned pale. She sacrifices all these and prays to Manmadha only to get a blessing.

What is that blessing?

To make her birth as a woman, more meaningful, she should get a name that, she is the one who holds the feet of her lord Kesava. To get this opportunity, she is withstanding all the torments by observing the worship by fasting.

Friday, October 5, 2018

நாச்சியார் திருமொழி 1.7 - nAchiyAr tirumozhi 1.7

பாடல் 7

காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக்
..கட்டி அரிசி அவல் அமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
..மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேய முன் அளந்தவன் திரிவிக்கிரமன்
..திருக்கைகளால் என்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிறும் என் தடமுலையும்
..தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே

மன்மதனே, காய்கள் காணப்படுகின்ற பசுமையான நெல், கரும்பு, கரும்புக்கட்டி (வெல்லம்), அரிசி, அவல் இவற்றைக் கொண்டு சுவையான பதார்த்தத்தைச் சமைத்து,  உனக்குப் படைத்து, நல்ல வாக்குடைய வேதம் ஓதும் அந்தணர்கள் மந்திரம் சொல்ல,  உன்னை வணங்குகின்றேன். தேய என்றால் உலகம். தேசம் என்பதை தேயம் என்றும் கூறுவார். உலகை முன்பொருநாள் அளந்தவனான திரிவிக்ரமன் தன் திருக்கைகளால் எனது ஒளியுடைய (சாயை என்றல் ஒளி; மரகத சாயே என்று மீனாட்சியை ஸ்ரீ தீட்சிதர் பாடுவார்) வயிற்றையும், மென்மையான பருத்த முலைகளையும் தீண்டும் வண்ணம் நீ செய்ய வேண்டும். அவ்வாறு செய்து, எனக்கு அப்பேறு கிட்டினால், இவ்வுலகில் நான் மிகுந்த புகழோடு இருப்பேன்.

Song 7

kaayudai nellodu karumbu amaitthu
..katti arisi aval amaitthu
vaayudai maRaiyavar mandhiratthaal
..manmadhanE unnai vaNangugindREn
thEya mun aLandhavan thirivikkiraman
..thirukkaigaLaal ennaith theeNdum vaNNam
chaayudai vayiRum en thadamulaiyum
..tharaNiyil thalippugazh tharakkitRiyE

Oh Manmadha, I prepared a dish made out of fresh paddy (kaai udai nel), sugarcane (karumbu), jaggery (karumbu katti - sugarcane cubes), rice (arisi), rice flakes (aval) and offered it to you along with the mantras (manthiratthaal) chanted by vedic scholars. You need to make lord Trivikrama who measured (mun aLandhavan) the whole world (thEyam = thEsam) with his feet, to embrace (theendum vannam) my stomach (vayiru) and breasts (thada mulai) with His hands (thirukkaigaLaal) and accept me. If this happens, then I will live in this world with never evading fame.

Tuesday, October 2, 2018

நாச்சியார் திருமொழி 1.6 - nAchiyAr tirumozhi 1.6

பாடல் 6

உருவுடையார் இளையார்கள் நல்லார்
..ஓத்துவல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர்கொண்டு பங்குனிநாள்
..திருந்தவே நோற்கின்றேன் காமதேவா
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்
..கருவிளை போல்வண்ணன் கமலவண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
..திருந்தவே நோக்கு எனக்கு அருளுகண்டய்

காமதேவனே,

1. உருவுடையார் - அழகிய உருவம் உடையவர்கள்,
2. இளையார்கள் - இளமையாக இருப்பவர்கள்,
3. நல்லார் - நல்லவர்கள்,
4. ஓத்துவல்லார்கள் - சாத்திரங்களில் (ஓத்து) வல்லுனர்கள்

இவர்களின் துணைகொண்டு, பங்குனி மாதத்தில் உள்ள நல்ல நாளில் (பங்குனி நாள்), விடியற்காலையில் (வைகல்) , நீ இருக்கும் இடத்தில் வந்து (தெருவிடை எதிர்கொண்டு), உன்னை வணங்குகின்றேன் (நோற்கின்றேன் காமதேவா). எதற்காக என்றால்,

1. கரிய உடை அணிந்தது போல் உள்ள மேகம் (தன்னிடத்தே நீர்கொண்ட மேகம்) போன்ற வண்ணம் உடையவனும்,
2. காயாம்பூ போன்றவனும்,
3. கருவிளை என்னும் காக்கணப்பூ போன்ற வண்ணம் உடையவனுமான

அந்தக் கண்ணன், அவனது தாமரைப் போன்ற முகத்தில் உள்ள திருக்கண்களால் என்னை நோக்க வேண்டும் என்பதற்காக.

Song 6

uruvudaiyaar iLaiyaargaL nallaar
..Otthu vallaargaLaik konNdu vaigal
theruvidai ethirkoNdu panguni naaL
..thirundhavE nORkindREn kAmadEvA
karuvudai mugil vaNNan, kaayaa vaNNan
..karuviLai pOl vaNNan, kamala vaNNa
thiruvudai mugatthinil thirukkaNgaLaal
..thirundhavE nOkku enakku aruLu kaNdAi

Kamadeva, with the help of these 4 persons (persons with beauty, youth, good heart, expert in shaastraas) on the early morning hours (vaigal) of an auspicious day in the month of panguni, I came to the place where you reside and offer my worship to you. Why?

To make eyes on the lotus like face (kamala vanna thiruvudai mugatthinil thirukkaNgaL) of the lord who is as black as the dark clouds containing water in it (karuvudai mugil vannan), as black as kaayaam flower (kaayaa vannan), karuviLai flower  (karuvilai pOl vannan) fall on me (thirundhavE nokku enakku aruL).

Sunday, September 30, 2018

நாச்சியார் திருமொழி 1.5 - nAchiyAr tirumozhi 1.5

பாடல் 5

வானிடை வாழும் அவ்வானவர்க்கு
..மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
..கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று
..உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில்
..வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

ஆண்டாளின் தீவிர பக்தி இந்தப் பாட்டில் தெரிகிறது. வானுலகில் வாழும் தேவர்களுக்கென்று, அந்தணர்கள் செய்து வைத்த அவிசு ஆனதை, காட்டில் திரியும் நரியானது, யாகம் செய்யும் இடத்தில் புகுந்து, முகர்ந்து பார்ப்பது போல, தன் விஷயத்தில், கையில் சங்கு சக்கரம் வைத்துள்ள உத்தமனுக்கு என்று வளர்ந்த மார்பகத்தை, மானிடர் எவருக்கேனும் என்று யாராவது பேசினார்கள் என்றால் (அதாவது தன்னை நாரணனுக்கு அல்லாது மற்ற எவருக்கேனும் மனம் முடித்துக் கொடுத்தால்) அந்த நொடியிலேயே அவள் உயிர் அவளை விட்டுச் சென்றுவிடும் என்கிறாள்.

Song 5

vaanidai vaazhum avvaanavarkku
..maraiyavar veLviyil vaguttha avi
kaanidaith thirivathor nari pugundhu
..kadappathum mOppathum seivathu oppa
oonidai aazhi sangu utthamarkkendru
..unnitthu ezhundha en thada mulaigal
maanidavarkku endru pecchuppadil
..vaazhagillen kandaai manmadhane

This song shows the staunch devotion of Andaal to Krishna. The brahmins, performing yagna, would have kept their offerings to the celestial beings. A fox will come from the forest and would smell it and sometime eat it. This should not happen in her case. That is she has made up her mind to get united with the Lord, who is holding a conch and a disc in His hands. If someone talks of getting her married to someone else, that very moment her life will not be with her.

Saturday, September 29, 2018

நாச்சியார் திருமொழி 1.4 - nAchiyAr tirumozhi 1.4

பாடல் 4

சுவரில் புராண!  நின் பேர் எழுதிச்
..சுறவ நற்கொடிகளும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
..காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா
அவரைப் பிராயந் தொடங்கி என்றும்
..ஆதரித்து எழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே

காமதேவனே, சுவற்றில் புராணனான (பல காலமாக இருந்துவருபவன் - புராணன்) உன் பெயரை எழுதி வைத்தேன். உனது கொடியான சுறா மீன் கொடிகளையும், உன் வாகனமான குதிரைகளையும் (துரங்கங்கள்) , சாமரம் வீசும் பெண்களையும் (கவரிப் பிணாக்கள்), கரும்பு வில்லையும் உனக்குக் காட்டிக்கொடுத்தேன். என் இளமைப் பிராயம் தொட்டே, கண்ணபிரானையே (துவரைப் பிரானுக்கே) நினைத்து வளர்ந்து வந்தேன். அவ்வாறே என் முலைகளை அந்தக் கண்ணனுக்கே என்று சங்கல்பம் செய்துகொண்டேன். விரைவில் எனது ஆசைகளை (கண்ணனை அடைய வேண்டும்) நிறைவேற்றித் தரவேண்டும்.

Song 4

suvaril purANa nin pEr ezhuthi
..suRava narkodigalum thurangangalum
kavari pinaakkalum karuppu villum
..kaattith thandhen kandaai kamadeva
avarai piraayam thodangi endrum
..aadharitthu ezhundha en thadamulaigal
thuvarai piraanukke sangarpitthu
..thozhuthu vaitthen ollai vithikkitriye

Oh Kamadeva,

I wrote your name on the walls.
I showed you the flag with whale on it, horses, maids waving the fans and the bow made of sugarcane.

From very early age, I grew up thinking of Lord Krishna, the King of Dwaraka and took an oath that the breasts of mine are only for Him. so please make my wish come true.

Friday, September 28, 2018

நாச்சியார் திருமொழி 1.3 - nAchiyAr tirumozhi 1.3

பாடல் 3

மத்த நன்னறுமலர் முருக்கமலர்
..கொண்டு முப்போதும் உன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
..வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
..கோவிந்தன் என்பதோர் பேரேழுதி
வித்தகன் வேங்கடவாணன் என்னும்
..விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே

மத்த - ஊமத்த மலர். நல்ல வாசம் உள்ள ஊமத்த மலர், முருக்க மலர் இவற்றைக் கொண்டு, மூன்று காலமும் மன்மதனே உன் அடியை வணங்குகின்றேன். தத்துவம் இல்லாதவன் நீ என்று உன்னை நான் வசைப்பாடா வண்ணம் நீ ஒன்று செய்ய வேண்டும். என்னவென்றால், உன் கையில் இருக்கும் மலர்க்கணைகளைத் தொடுத்து, அவற்றில் கோவிந்தன் என்னும் பெயர் எழுதி, அனைத்தும் அறிந்த வித்தகன் வேங்கட மாமலை தன்னில் உள்ள பிரகாசமான எம்பெருமானிடத்தில் நான் புகுமாறு செய்வதேயாகும்.

Song 3

mattha nan narumalar murukka malar
..kondu muppothum un adi vaNangi
thatthuvamili endru nenjerindhu
..vaasagatthu azhitthu unnai vaithidaame
kotthalar poongaNai thodutthukkondu
..govindhan enbathOr per ezhuthi
vitthagan venkata vaaNan ennum
..viLakkinil puga ennai vithikkitriye

Oh Manmadha, I am offering sweet smelling oomattham and murukkam flowers to you. Please do me a favour. If not, I will curse you saying you are a traitor who doesnot know values. Please write the name 'Govindha' on the arrows made of flowers with you and shoot it in such a way that, I could reach the radiant lamp, residing in Tirumalai, who is an adept in everything.

Thursday, September 27, 2018

நாச்சியார் திருமொழி 1.2 - nAchiyAr tirumozhi 1.2

பாடல் 2

வெள்ளை நுண்மணல் கொண்டு தெருவணிந்து
..வெள்வரைப்பதன் முன்னம் துறைபடிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரிமடுத்து
..முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
..கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி
புள்ளினை வாய்பிளந்தான் என்பதோர்
..இலக்கினில் புக என்னை எய்கிற்றியே

மன்மதனே, நீ இருக்கும் தெருவினை (இடத்தினை - அதாவது நம் மனது), நன்றாக சலிக்கப்பட்ட வெள்ளை நிற மணல் கொண்டு அலங்கரித்தேன். பின்னர் சூரியன் உதயத்திற்கு முன்னமே, குளத்தில் நீராடி முடித்துவிட்டேன். முட்கள் இல்லாத சுள்ளிகளை எடுத்து, தீயில் இட்டேன் [தீய எண்ணங்கள் முட்கள். அந்த முட்களை நீக்கி, நம் எண்ணமாகிய சுள்ளியை, ஆஹுதியில் இடுதல். இறைவனை அடைய யாகம் பண்ணுவது பற்றி கூறுகிறாள்].

இவ்வாறெல்லாம் ஏன் செய்கிறேன் என்றால், உனது மலர்க்கணைகளில் (மன்மதனின் பஞ்ச பாணம் - அம்பாள் கையிலும் அதே அம்புகள் தான் இருக்கின்றன) "கடல் வண்ணன்" என்று பேர் எழுதி, அந்தப் புள்ளின் வாய் பிளந்த பரமனின் மேல் விடுவாயாக.

அதாவது, தன்னையே மலர் அம்பாக வைத்து, தன் மேல், கடல் வண்ணன் என்று பெருமாளின் நாமத்தை எழுதி, அவனை நோக்கி விடுமாறு, ஆண்டாள் காமதேவனைப் பிரார்த்திக்கிறாள்.

வெள்வரைப்பதன் முன்னம் என்றால், சூரியன் உதிப்பதற்கு முன்னமே என்று பொருள்.

பஞ்சதன்மாத்ர சாயகா என்று லலிதா சஹஸ்ரநாமம் வர்ணிக்கிறது. பஞ்சபாணி என்று ஒரு பெயர் உண்டு. சிவபெருமான், மன்மதனை எரித்த போது, அம்பாள், அவனது கரும்பு வில்லையும், மலர்க்கணையையும் தாம் எடுத்து வைத்துக்கொண்டாள் என்று கூறுவார்கள். மனோ ரூப இக்ஷு கோதண்டா, அதாவது நம் மனம் என்னும் கரும்பு வில்லையும், நமது உணர்வுகள் என்னும் அம்புகளையும் அம்பாளிடம் கொடுத்துவிட்டால், அவை நல்ல வழியில் இயங்கும் என்ற உள்ளர்த்தம். அதுபோல, இங்கே, ஆண்டாள், மன்மதனிடம் வேண்டுவது, நாராயணன் மேல் நம்மைச் செலுத்துக என்பதாகும்.

Song 2

veLLai nuN maNal koNdu theruvaNindhu
..veL varaippathan munnam thuRaipadindhu
muLLum illaach chuLLi erimadutthu
..muyandRunnai nORkindREn kAmadEvA
kaLLavizh poongaNai thodutthukkoNdu
..kadal vaNNan enbathOr pErezhuthi
puLLinai vaai piLandhaan enbathOr
..ilakkinil puga ennai eigitRiyE

Kamadeva, I decorated the place where you reside with white sand that is very fine. I removed the thorns from the twigs. I bathed before sun rise (veL varaippathan munnam thuRai padindhu) in the pond. I am offering the twigs in the sacred fire for you. Why am I doing all these? It is because, I want you to write the name of the lord who is in the colour of the ocean (Kadal vannan) on your arrows with myself tied to it and shoot it on him (ilakkinil puga), the one who killed the asura who came in the form of a crane (puLLinai vaai piLandhaan).

In Lalitha Sahsranama there are two namas - manO roopa ikshu kOdhandA, pancha thanmaatra saayaka. Manmadhan has a bow made of sugarcane (ikshu) and five arrows made of flowers. When he disturbed Lord Shiva when he was doing penace, he was burnt to ashes. Parvati took Manmadhan's weapons and had it with her. The bow symbolises our mind and the five arrows are our five senses. When they are with Devi, it will do only the right thing. If not, they will wander somewhere and keep doing wrong. This is the inner meaning of Ambal holding manmadhan's weapons.

Wednesday, September 26, 2018

நாச்சியார் திருமொழி 1.1 - nAchiyAr tirumozhi 1.1

திருமொழி 1

பாடல் 1

தையொரு திங்களும் தரைவிளக்கித்
..தண் மண்டலமிட்டு மாசிமுன்னாள்
ஐய! நுண்மணல் கொண்டு தெருவணிந்து
..அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா
உய்யவுமாங் கொலோ என்று சொல்லி
..உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
..வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே.

மார்கழி மாதத்தில் நோன்பு இருந்து, கண்ணனின் அருளைப் பெற்ற ஆண்டாள், தை மாதம் பிறந்து விட்டது, இன்னும் கண்ணன் நேரே வரவில்லையே என வருந்தி, மன்மதனைத் துணைக்கு அழைக்கிறாள். பிரிந்தோரைச் சேர்த்துவைக்கும் வல்லமை உடைய மன்மதனே, நான் வாழவேண்டும் என்று எண்ணி, உன்னையும், உன் தம்பியான சாமனையும் தொழுதேன். தை மாதம் முழுவதும், நீ எங்கெல்லாம் இருப்பாய் என்று பரிசோதனை செய்துவிட்டு, மாசி மாதத்தின் முதலில் அந்த இடங்களை சுத்தம் செய்து, அலங்கரித்து வணங்குகின்றேன். எதற்காக? நெருப்பினை உமிழக்கூடிய சக்கரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் திருவேங்கடமுடையானிடம் என்னை நீ சேர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக.

கண்ணனுக்கும் ருக்மிணிக்கும் பிறந்தவன் பிரத்யும்னன் (மன்மதனின் அம்சம்). கண்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் சாம்பன். சாமன் எனவும் கூறுவார். தலைவனான கண்ணனை அடையவேண்டும் என்றால் அவனது புதல்வர்களை முதலில் அணுகவேண்டும் அல்லவா!

மன்மதன் - பிரும்மத்தின் மனத்திலிருந்து தோன்றியவன். மன்மதனை வணங்குதல் என்பது, நம் மனதினை வணங்குவதாகும். நம்மை இறைவனுக்கு உரித்தாக்க வேண்டும் என்றால், நம் மனத்தைத் தானே முதலில் சரிபடுத்த வேண்டும். அதனால் மன்மதனே என்று ஆண்டாள் பாடுவது, அவள் மனத்தையே. உலக விஷயங்களில் தொலைந்துபோன மனத்தினைத் தேடிக் கண்டுபிடித்து, அதனை சுத்தமாக்கி, இறைவனை அடைய தனக்கு உதவுவாயாக என்று பணிகிறாள்.

காமனையும் சாமானையும் வணங்குவதற்கான இன்னொரு காரணம்: காமன் - காமத்தின் வடிவம் (ஆசை). சாமன் - குரோதத்தின் (கோபம்) வடிவம். நாம் இறைவனை நோக்கிச் செய்யும் பயணத்தில் தடையாக இருப்பவர்கள் காமம், குரோதம் முதலிய ஆறு துர்குணங்கள். லோபம், மோஹம், மதம், மாத்சர்யம் ஆகிய மற்ற நான்கும், இந்த காம, குரோதத்திலிருந்து தோன்றுபவையே. ஆதலால், காமத்தையும், குரோதத்தையும் வணங்கி, இறைவனை நாம் அடைவதற்கு, தடை விதிக்காதவாறு வேண்டுவதே.

Thirumozhi 1

Song 1

thaiyoru thingaLum thari viLakkith
..thaN maNdalam ittu, maasi munnaaL
ayya! nuN maNal koNdu theruvaNindhu
..azhaginukku alangaritthu ananga dEvA!
uyyavum aankolO endru solli
..unnaiyum umbiyaiyum thozhuthen
veyyathor thazhal umizh chakkarakkai
..vEnkatavarkku ennai vithikkitriye

Andal completed the paavai nOnbu in Margazhi successfully. But still, she could not see Krishna coming to take her with Him. So, she sings to Ananga dEva (Manmadhan or Kamadevan). She describes Manmadhan as the one who could unite the people together with Love, please help me to reach the lord of Tiruvenkadam who has a disc that emits fire, in his hand. She spent the full month of  thai searching for the places where Manmadhan will reside and in the first half of the next month Maasi, she decorated the place of his residence and worshipped him (Kaaman) and his brother Saaman to help her to unite with Sri man Narayana.

Pradyumnan (an amsam of Manmadhan) was born to Krishna and Rukmini. Saamban or saaman was born to Krishna and Jambavathi. To reach a lord, we need to appeal to His sons right!

Another aspect - Manmadhan was borne from the Supreme's mind. Praying to manmadhan is same as praying to our own mind. To offer ourselves to the Lord, our mind should be tuned first right? So Andal singing Manmadhane, is that, she is addressing her own mind. She is searching for her mind which was lost somewhere in this worldly pleasure and then found it at last. Then she clenses it (decorate) and asks it to unite her with the lord.

Andal Praying to Kaman and his brother Saman - another interpretation. Kaman represents desire and Saman represents anger. Desire and anger are the root cause of all problems. All though there are six ill senses in total - kamam, krodham, lobam, moham, madham and matsaryam, the last 4, viz., lobam, moham, madham and matsaryam are all extensions of kamam and krodham. So, Andal prays to desire and anger to help her to reach God by not intervening in her journey.